சென்னை: ரூ.175 கோடியில் புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். 38 கிராமங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க ரூ.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.